புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களிலுள்ள காணிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் காடுகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கின்றமை தொடர்பில் சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.