பொருளாதர நெருக்கடியை நாடு எதிர்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் வரவு-செலவு திட்டத்தினூடாக சகலருக்கும் நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வ ஜன நீதிக்கான அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதர நெருக்கடியை நாடு எதிர்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் வரவு-செலவு திட்டத்தினூடாக சகலருக்கும் நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுத்திருக்கலாம். எனினும் அவ்வாறான நீதி எதுவும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாவதற்கான வரவு – செலவு திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.