உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த போட்டி பொனால்ட் ஷூட்அவுட் ஆக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இங்கிலாந்துக்கு கிட்டத்தட்ட ஒரு பெனால்டி வலியாக இந்த முடிவு அமைந்தது.

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணி, முன்னாள் சம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது.

உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி 1962ஆம் ஆண்டு சம்பியன் பட்ட அந்தஸ்துடன் களமிறங்கி கோப்பையை மீண்டும் வென்றது. இந்த சாதனையை இதுவரை எந்த அணியும் தகர்க்கவில்லை. இம்முறை கட்டாரில் இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியாக பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் களத்தில் ஆக்ரோஷம் காட்டியது.

அதற்கேற்ப அந்த அணியின் வீரர் Aurélien Tchouaméni ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெறவைத்தார்.

தொடர்ந்து 54வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை ஹரி கேன் கொலாக்க, இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. இந்த கோலின் மூலம் இங்கிலாந்து சார்பில் அதிக கோலடித்தவர் என்ற வெய்ன் ரூனியின் 53 கோல் சாதனையை சமன் செய்தார்.

பிரான்ஸ் வீரர் ஒலிவர் ஜிரூட் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து மீண்டும் ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பினார். அவரின் அற்புதமான ஆட்டத்தால் பிரான்ஸ் அணி 2- 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மீண்டும் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இங்கிலாந்திற்கு இரண்டாவது பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹரி கேன் அனை வெளியில் அடித்து, அருமையான வாய்ப்பை வீணடித்தார்.

இந்த ஆட்டம் கிட்டத்தட்ட பெனால்ட்டி ஷூட்அவுட் போல அமைந்து விட்டது. 1990 உலகக்கோப்பையில் இங்கிலாந்து இப்படி வாய்ப்பை தவறவிட்டு, வெளியேறியது. இன்று மீன்டும் ஒரு பெனால்டி வலி.

பிரான்ஸ் அரையிறுதியில் மொராக்கோவை எதிர்கொள்கிறது.