கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் ரஷ்யா உக்கிரைன் மீது போர் தொடுத்து வருகின்றது. இதன்காரணமாக அதிகமான பொதுமக்களும், இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதுள்ளனர். இந்நிலையில் பலம் வாய்ந்த ரஷ்யாவினை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக செய்து வருவதுடன், ரஷ்யா மீது பல்வேறு வகையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில் போரை முடிவுக்கு கொன்டு வருவதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ரஷ்யாவுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றன. ஆனால் அமெரிக்காவின் ஆயுத உதவியினால் தொடர்ந்து எதிர்து போரிடுகின்றது உக்ரைன். இந்நிலையில் நேற்று உக்ரைன் ரஷ்யா மீது நடாத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.