அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 2 ஆயிரத்து 68 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,973 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 845 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,744 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,567 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 ஆயிரத்து 614 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்வடைந்ததை அடுத்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுவரை அமீரகத்தில் மொத்தம் 4 கோடியே 24 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.