தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 177 பேர் நேற்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.