நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார் . நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் . ஏற்கனவே எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார் .