தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான தவறான செய்திகள் மூலம் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசியலில் நுழைய விமுக்தி குமாரதுங்கவுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை என்றும் பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பு அரசியல் மட்டுமல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்