இலங்கையில் தங்கியுள்ள, வெளிநாட்டவர்களின் அனைத்து வகையிலான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஓகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த செல்லுபடி காலம் செப்டெம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.