ஐ.நா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் தேதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இதில், பருவநிலை மாற்றம், கொரோனா தடுப்பூசி, இனவெறி உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.

இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த கூட்டத்தில் நேரில் வந்து பங்கேற்பதை தவிர்த்து, வீடியோவின் மூலமாக தங்களின் கருத்துகளை பதிவு செய்யும்படி அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து 192 ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் அமெரிக்க தூதரகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ‘கொரோனா பரவல் காரணமாக, தலைவர்கள் நேரில் வருவதை தவிர்த்து, ஒரு வீடியோவில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து அனுப்பலாம். நியூயார்க்கிற்கு அதிகளவில் தலைவர்கள் வருவதால், கொரோனா பரவல் ஆபத்து அதிகரிக்கும் ‘ என்று கூறப்பட்டுள்ளது.