வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (07) நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, சட்டபூர்வமாக்குவதே இதன் நோக்கம் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.