கோட்டாபயவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பானது நேற்று புதன்கிழமை(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய இன்று காலை சஜித் பிரேமதாசவுக்கு திடீரென தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கரிமப் பசளை விவகாரம் பற்றி உரையாடியுள்ளார்.

கட்சியின் உயர்பீடத்துடன் இது பற்றி பேச்சு நடத்தி மீண்டும் சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.