நாட்டில் தினமும் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 சதவீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரித்தால், 21 சதவீதமானோர் 5 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவும். 75 % மானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 சதவீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.