உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் வங்காளதேசத்திலும் நுழைந்துள்ளது. வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை. அணியில் இடம்பெற்ற மற்ற வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.