ரஷ்யா ஏராளமான ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யாவை அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகள் பலமுறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதன்படி ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த ராணுவத்தினர்கள் மற்றும் பல பயங்கர போர் எந்திரங்களை பெலாரஸூக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இதுபோன்ற செயல்களால் அண்டை நாடுகளில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.