3ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளது.

இன்று முற்பகல் 10.30 அளவில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவு தூபிக்கு அருகிலிருந்து ஆரம்பித்த இந்த பேரணி சங்கிலியன் பூங்காவரையில் முன்னெடுக்கப்படுகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த தினங்களில் வட மாகாணத்தில் வாகனப்பேரணியினை முன்னெடுத்திருந்தது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது.

இன்றைய ஆர்ப்பாட்ட பேரணி மாத்திரமின்றி எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.