நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு , அங்கு வாழும் மலையக உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

வன்னியில் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மக்களுடன் சினேக பூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்.