எங்களுடைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நேற்றைய தினம் திங்கட்கிழ்மை (08-03-2022) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூடத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துக் கொண்டிருக்கையில் எதிர்க்கட்சியினர் இடைமறித்து கேள்வியொன்றை எழுப்பலாமா என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மகிந்தானந்த அளுத்கமகே ரணில் விக்கிரமசிங்க அனுமதித்தால் நான் அனுமதிப்பேன். அவர் அனுமதித்தால் நான் அதற்கு அனுமதி வழங்குவேன் அவரே தற்போது எங்கள் தலைவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் என்ற தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.