ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வக்கட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.

இதன்பிரகாரமே சர்வக்கட்சி கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.