பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு புத்துயிர் பெறுவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தனது சொந்த கூற்றுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சியை கைப்பற்ற போராடும் எதிர்க்கட்சியை பார்ப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், ஒரு நாட்டை எப்படி ஆள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரதமருக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையற்ற பிரதமர் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தெரியும்.

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை பிரதமருக்கு கற்றுக்கொடுக்கவுள்ளதாக எம்.பி பிரேமதாச மேலும் தெரிவித்தார்.