கோட்டாபய – ரணில் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை ஓயோம் என்பதை ‘முழு நாடும் கொழும்பிற்கு’ எனும் அறைகூவலுடன் இன்று கொழும்பில் பாரிய மக்கள் தன்னெழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்பபை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த தொலைநோக்கு பார்வையற்ற ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட, கோட்டா – ரணிலை விரட்டாமல் நாங்கள் யாரும் வீட்டுக்குப் போக மாட்டோம் என்று இலங்கை மக்கள் அனைவரும் கொழும்பில் ஒன்று கூடி அறிவிப்போம் என்ற முழக்கத்துடன் இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.

இதேவேளை கொழும்பின் சில பகுதிகள் உள்ளிட்ட மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு நேற்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.