காலி முகத்திடல் ஆர்பாட்ட பகுதியில் பல நாட்களாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் 20 வயதுடைய யுவதியொருவர், அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபருடன் இரகசியமாகத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் திருமணமான கணவர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்தப் பெண் போராட்டப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் முறைசாரா உறவை வளர்த்துக் கொண்டுள்ளதாக அவரது கணவர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்போது அவரது மனைவிக்கும், சம்பந்தப்பட்ட ஆர்பாட்டக்காரருக்கும் சம்பந்தமில்லை என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.