போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றிய பந்துல குணவர்தன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.