பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்னர் அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.