நாட்டின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி,பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அடுத்த நிலையில் காணப்படும் சபாநாயகரே ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டுமே தவிர அவர் ஜனாதிபதி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜனாதிபதியாக குறைந்தது 30 நாட்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன்,அவரால் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இந்த 30 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.