இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளர்.

முன்னதாக கொழும்பில் இருந்து அதிகாலையில் ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருந்தன.

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரி மஹிந்த ரணசிங்க ஆகியோர் கட்டுநாயக்கவில் இருந்து மாலே நோக்கி விமானப்படை போக்குவரத்து விமானத்தில் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது கோட்டாபய ராஜபக்ச ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளர்.