அரசாங்கத்தில் இருந்து தனித்து செயல்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் திகதி பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மண்டபத்தை அண்டியுள்ள அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கூட்டத்தில் “உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தலில் தனித்தனியாகக் கேட்கத் தயாராகுங்கள்.” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி பதுளைக்கு வருவதற்கு தயாராகும் வகையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

“மொட்டுடன் கைகோர்த்து வாக்கு கேட்டாலும் நாங்கள் எதிர்பார்க்கும் வேட்புமனு கிடைக்காது. எனவே தனித்து கேட்க தயாராக வேண்டும். எங்கள் கட்சிக்கு தனித்து கேட்பது கடினம். ஆனால் நாம் அதை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்ததாக  குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் இச்சந்திப்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பதுளை தொகுதியின் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .