ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் சற்று முன்னர் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.