இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தற்போது அதி உச்ச தந்திர நகர்வில் ஈடுபட்டுள்ளமையினால் சஜித் பிரேமதாச கடும் அச்சத்தில் உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச சாதியில் குறைந்துள்ளமையினால் தற்போது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவர பௌத்த மகா சங்கத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன்,அரசியலில் மீண்டும் எழுச்சி பெற ராஜபக்ச குடும்பமும் இதனையே விரும்புகின்றனர்.

இவ்வாறான நிலையில், சிங்கள தேசத்தில் மிக பெரிய இரத்த ஆறு ஓட வேண்டும்.அவ்வாறு இரத்த ஆறு ஓடி அதில் சிங்கள மேல் வர்க்கத்தினரின் இரத்தமும் கலந்தால் மாத்திரமே சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதி கதிரையில் அமர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.