பஞ்சாப் எல்லை அருகே ஊடுருவிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், அந்த ஆளில்லா விமானத்தை 18 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர்.

இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி சென்றது. கடந்த 27 ஆம் தேதி இரவு, பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டு உள்ளனர்.

மேலும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், பாதுகாப்பு படையினர் மீட்ட ஒரு பையில் ஆறு ஏகே 47 ரக துப்பாக்கிகள், 3 கை துப்பாக்கிகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.