கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தாக்கம் முற்ற , மனைவி
ஆத்திர மிகுதியினால், தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்
கொண்டார். இதைக் கண்ட கணவன், இறப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து,தனது கழுத்தை தானே வெட்டிக் கொண்டார்.

இச்சம்பவம் படல்கும்புறையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தீ வைத்துக் கொண்ட மனைவி, நேற்றைய தினமே (03-11-2022) சிகிச்சை பலனின்றி
மரணமானார். மனைவி மரணமாகிய மறுதினமான கணவன் இன்று (04-11-2022)
சிகிச்சை பலனின்றி மரணமானார்.

படல்கும்புறை இறப்பர் தோட்டத்தில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஆர். எம்.
நந்தசேன என்ற 57 வயதுடைய கணவனும், அவரது மனைவியான 56 வயது நிரம்பிய
ஆர். எம். மல்லிகா என்ற பெண்ணுமே மரணமானவர்களாவர்.

படல்கும்புறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க மேற்படி
சம்பவம் குறித்து தீவர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.