முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.