கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அதானி நிறுவனம், அதன் உள்நாட்டு பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.