இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் கூடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலனின் அழைப்பின் பேரிலே அவர் இந்தியா சென்றுள்ளார்.

கூடலூர் TENTEA தோட்டங்களில் பணிப்புறியும் தொழிலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு பெற்றுத்தருமாறு உதவி கோரியுள்ளனர். அதற்கமையவே அவர் இந்தியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.