அவுஸ்திரேலியாவில் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக பொதுவெளியில் காணப்பட்டார். டேட்டிங் செயலியில் சந்தித்த சிட்னி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்முறையாக பொது இடத்தில் காணப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த வியாழகிழமை தனுஷ்க குணதிலகவிற்கு இரண்டாவது முயற்சியில் ஜாமீன் வழங்கப்பட்டது. அதற்காக தனுஷ்க “நண்பரின் நண்பன்” வழங்கியுள்ள 150,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான உத்தரவாதத்துடன் 50,000 அவுஸ்திரேலிய டொலர் தொகையும் செலுத்தியுள்ளனர்.

ஜாமீன் கிடைத்த பிறகு, அவர் இன்று (நவ.22) சிட்னியின் வடமேற்கில் உள்ள ஈஸ்ட்வுட் காவல் நிலையத்தில் கையெழுத்திட (Daily Reporting) நுழைந்தபோது படம்பிடிக்கப்பட்டார்.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் குணதிலக பொதுவில் காணப்படுவது இதுவே முதல் முறை.

வியாழன் அன்று நடந்த இரண்டாவது ஜாமீன் விசாரணையின்போது, ​​வழக்கறிஞர் முருகன் தங்கராஜ், நீதிமன்றத்தில் குணதிலக மீது சாட்டப்பட்டுள்ள அனைத்து வன்முறை குற்றங்களையும் மறுத்தார். “இது ஒருone-on-one” என்று அவர் கூறினார்.

டிஎன்ஏ சான்றுகள், மின்னணுவியல் மற்றும் தடயவியல் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அரசுத் தரப்பு வழக்கு வலுவானது மற்றும் “ஒப்புதல் அடிப்படையில்” இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஜேனட் வால்குவிஸ்ட், குணதிலக்கவுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும், அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட எதுவும் இல்லை என்றும் கூறினார்.

பின்னர், இரவு ஊரடங்கு உத்தரவு, தினசரி காவல் நிலையத்தில் கையெழுத்திடல் மற்றும் அவரது கடவுச்சீட்டை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் குணதிலகவிற்கு ஜாமீன் வழங்கினார்.

மேலும், அவர் ஒரு தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் டேட்டிங் பயன்பாடுகள் அல்லது சமூக ஊடகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

குணதிலக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன் பயணிக்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​முடியாது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் எந்த மனுக்களும் அளிக்கவில்லை மற்றும் இந்த வழக்கு ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.