இந்த வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கேள்வி பதிலுக்காக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர்,
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட வளாகங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சட்டமூலம் ஆகியவற்றின், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.