இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது

2018 இல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தாய்லாந்து அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதான அதிகாரி கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.