சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு (புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்திருந்தார்.

குறித்த குழந்தைகளை தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாகவும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே மேலும் தெரிவித்திருந்தார்.

அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.