சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா  வன்னியராச்சி கொவிட் தொற்று பரவலை  கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரவை மாற்றத்தில் தான் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமை செய்த பாக்கியம் என்று கருத வேண்டும்.

கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.