இது நாள் வரை அமெரிக்க படைகளுக்கு மொழிபெயர்பாளராக இருந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் கை குழந்தையோடு கடந்த 5 நாட்களாக விமான நிலைய வாசல் முன்னால் நிற்கிறார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இறுதியாக தனது கை குழந்தையை அமெரிக்க படைகளிடம் கொடுத்து. அந்த குழந்தையை ஆவது காப்பாற்றுங்கள் என்று அவர் கெஞ்சி உள்ளார். ஏன் எனில் அவரை தலிபான்கள் ஏற்கனவே தேடி வருகிறார்கள். கண்டு பிடித்தால் குடும்பத்தோடு கொன்றுவிடுவார்கள்.