நடிகை பட்டியலினத்தவர் பற்றி மோசமாக பேசியதால் அவர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செய்தனர்.

அதன் பின் ‘வாய்தவறி பேசிவிட்டேன்’ என சொல்லி ஜாமீனுக்கு மீரா மிதுன் மனு செய்த நிலையில் கோர்ட் அதை தள்ளுபடி செய்து இருக்கிறது. மீரா மிதுன் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆன நிலையில் அவருக்கு உடனே வழங்கக்கூடாது எனவும் மக்கள் கூறிவந்தனர். ‘வாய்தவறி பட்டியலினத்தவர் பற்றி பேசிவிட்டேன்.

நான் பல படங்களில் நடிக்கிறேன்இ சிறையில் இருப்பதால் நான் கால்ஷீட் கொடுத்து இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது’ என கேட்டிருந்தார். ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ஜமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் போலீசார் மீரா மிதுன் மீது அதிகம் வழக்குகள் நிலுவையில் இருப்பது பற்றியும் கூறி உள்ளனர். விசாரணை தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார்.