இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜென்ஹொன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்த இரு நாடுகளும் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கொவிட் தடுப்புக்காக சீன அரசினால் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு நட்பு ரீதியாக சீன அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு இதன்போது சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.