நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீனுக்கு அண்மையில் பாரிய இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சத்திரசிகிச்சையினால் ஏற்பட்ட சில உடல் ஆரோக்கிய பிரச்சினையினால் இன்று ஹரீன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹரீனுக்கு மீண்டும் இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.