சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முயற்சித்துவரும் அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசின் இந்த நகர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, டொலர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.