நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறாமை, நிதி நிலைவரம் பற்றி தெளிவுப்படுத்தாமை உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தே குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுவருகின்றது.

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரணப் பெரும்பான்மைக்கூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தை கையாள எதிர்ப்பார்த்துள்ளது.