சர்வகட்சி மாநாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைத்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமருடன் அவமரியாதையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுமளவிற்கு நிதி அமைச்சர் அறிவற்றவராக உள்ளார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான ஆணவம் கொண்ட ஒருவரை நிதி அமைச்சராகக் கொண்டு நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேற்ற முடியாது.

இந்த ஆணவ ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு வெகு விரைவில் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மை இல்லாமலாக்கப்படும் என அறிவித்துள்ளார்.