” புதிய அமைச்சரவை என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும். எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு பதவி விலக வேண்டும், சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதே மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குகூட ஜனாதிபதி செவிமடுக்கவில்லை. மக்கள் கோரிக்கையை ஏற்காமல், புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். இது தீர்வு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்கான துண்துடைப்பு வேலை.

அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை எம்மாலும் ஏற்கமுடியாது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான ஜனநாயக விரோதச் செயலில் அரசு ஈடுபடக்கூடாது.” – என்றார் .