இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜகவின் மூலத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பிற்கு அமைவான பாதுகாப்பை மீள உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் இந்தியாவிற்கு எதிரான வௌிநாட்டு சக்திகள் மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமாக்கி வருவதாகவும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.