க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 74 வயதான ஒருவர் இன்று (28) தோற்றியிருந்தார்.

காலி நெலுவ களுபோவிட்டியன பிரதேசத்தில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற முதியவரே பரீட்சைக்கு தோற்றினார்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அவர் விஞ்ஞானம் பரீட்சைக்கு வந்ததுடன் மற்றும் கணித பாட பரீட்சைக்கும் தோற்றவுள்ளார்.