சிங்கப்பூரில் மேட்ரிமோனி ஒன்றில் 51 வயது பெண் ஒருவர் இளம்பெண் போல் மோசடி செய்த தொடர்பில் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

51 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலிஹா ராமு என்ற பெண் மேட்ச் மேக்கிங் என்ற மேட்ரிமோனி இணையதளத்தில் போலியான தனது சுயவிவரத்தை வெளியிட்டுள்ளார்.

அதனூடாக இந்திய ஆணையும் அவரது தந்தையையும் ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
மலிஹா தன்னை, கீர்த்தனா என்ற 25 வயது இளம்பெண்ணாக மேட்ரிமோனியல் போலியாக பதிவேற்றியுள்ளார். அதோடு தனது உறவினர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி வெளிநாட்டில் ராணுவ தளத்தில் பணிபுரிந்ததாகவும் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறி வீடியோ அழைப்புகளை தவிர்த்துள்ளார்.

2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது இருபத்தி ஒன்பது வயது மகனுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடிப்பதற்காக மேட்ச் மேக்கிங் இணையதளத்தில் தந்தை கோவிந்தன் தனசேகரன் முரளி கிருஷ்ணா ,ஒரு கணக்கை தொடங்கி அதில் தனது மகனின் சுயவிவரத்தை பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து கிர்த்தனாவிடம் விபரங்களை கேட்டு ஏற்படுத்தி ,வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரியும் தனது 27 வயது மருமகளின் புகைப்படத்தை அனுப்பி கீர்த்தனா இவ்வாறு தான் இருப்பார் என அவர்களை நம்ப வைத்துள்ளார். மணமகன் மற்றும் அவரது தந்தை பலமுறை திருமணத்தைப் பற்றி விவாதம் செய்ய செய்தபோது, போலியான குடும்ப காரணங்களை கூறி திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார் கீர்த்தனா.

மேலும் தனது சமூகப் பணிகளுக்கு நிதி தேவைப்படுவதாக கூறிய மலிஹா,5000 சிங்கப்பூர் டொலருக்கும் மேற்பட்ட தொகையை அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

அதேவேளை மலிஹா, ஏற்கனவே இதுபோன்ற மேட்ரிமோனி மோசடியின் மூலமாக 2,25,000 சிங்கப்பூர் டொலர் பெற்றுள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மலிஹாவுக்கு சிறை தண்டனையும் அபராதமும் சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில் இவ்வாறு மோசடியில் சிக்கிய மணமகன் குடும்பத்தார் 51 வயது பெண்ணின் செயலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.